இப்படி ஒரு மொக்கையான படத்த நடிக்க எப்படி ஒத்துக்குறானுங்கன்னு தான் புரியல. நேத்து சாயந்தரம் பொழுது போகல, கொஞ்சம் படம் பாக்கலாமேன்னு நெனச்சு இதை எடுத்தேன். அனுபமா வேற நடிச்சிருக்காங்க. கொஞ்சம் பாக்கலாமேன்னு நெனச்சது தப்பா போச்சு.
படம் ஆரம்பிச்சதுல இருந்து படம் அவ்ளோ செயற்கையா போகுது. அந்த கதாநாயகன சின்னப்பையனா இருக்கும் போது குடும்பமே கொண்டாடும். காரணமே கிடையாது. அவன் சந்தர்ப்ப வசத்தால் கொலை செஞ்சுட்டு சின்ன வயசுலேயே சிறார் பள்ளிக்கு போறான். யாரைக் காப்பாற்ற கொலை செஞ்சானோ அந்த பெண்ணின் கனவன் எதிர்பாத்த மாதிரியே நடந்துக்குறான். ஒவ்வொரு சீனும் இப்படித்தான் அடுத்து நடக்கப் போகுதுனு ரொம்ப சுலபமா பாக்குற எல்லோருமே யூகிச்சிட முடியுது. அப்படியே ஓட்டி ஓட்டி பாத்து தான் படத்த முடிச்சேன்.
தெலுங்கு படம் நான் பாக்குறதுக்கு காரணமே அதுல ஆக்ஷன், காதல், காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட்னு எல்லாமே கடந்து கட்டி இருக்கும்னு தான். தெலுங்கு படங்கள் எப்பவுமே என்னை disappoint ஆக வச்சதே இல்ல. ஆனா நான் செம்ம மொக்கடான்னு நெனக்க வச்ச படம் இது தான். எப்படி இப்படி நடிக்க ஒத்துக்கிட்டானுங்கன்னு தான் நான் பல சீன் பாக்கும் போது நெனச்சேன்.
No comments:
Post a Comment