Friday, March 26, 2010

வார்த்தைகள்

கவிதைக்கென சேர்க்கப்படும்
வார்த்தைகள் அறுந்து
தொங்குகின்றன அந்தரத்தில்.

பிடிக்கமுடியாத வேகத்தில்
சுற்றிச் சுற்றி வருகின்றன
தனிமையில் இருக்கும் போது.

வாயிலிருந்து ஓயாமல்
வந்துவிழும் வார்த்தைகளை
மண்ணுக்குள் புதைத்து விடுகிறேன்.

அவை விருட்சங்களாக
எழுந்து நின்று
கிளைகள் எங்கும்
வார்த்தைகள்

அவையே மீண்டும்
விதைகளாய் விருட்சங்களாய்
அங்கும் இங்கும் எங்கும்
வார்த்தைகள்.

Sunday, March 21, 2010

ஐபிஎல் - ராயல் சேலஞ்சர்ஸ்

இந்த ஐபிஎல் போட்டிகளின் ஆரம்பத்தில் வழக்கம் போல் அணிகளைப் பற்றிய கருத்துக் கணிப்புகள், தொலைக்காட்சி விவாதங்கள் என பெரிதாக பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பு உள்ள அணிகள் சொதப்பிக்கொண்டு தான் இருக்கின்ற. நான் வழக்கம் போல் எனக்குப் பிடித்த அணியான ராயல் சேலஞ்சர்ஸ் அணியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருதேன். எனக்கு டிராவிட், கும்ளே ரொம்ப பிடிக்கும் அதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பிடிக்கும். முதல் ஐபில் தொடரில், அந்த அணியில் டிராவிட் மட்டுமே சிறப்பாக ஆடினார். அது ஒரு டெஸ்ட் தொடருக்கான அணி போலவே இருந்தது. காலிஸ், சந்தர்பால் என ஒரு டெஸ்ட் அணி என்றே வர்ணிக்கப்பட்டது. தொடரிலும் சோபிக்க வில்லை.

இரண்டாவது தொடரில் முதல் போட்டியிலேயே முதல் தொடரின் வெற்றியாளரான ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆனால் அடுத்த 5 போட்டிகளில் வரிசையாக தோற்று என் வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிக் கொண்டது. அப்போது அணியின் தலைவராக இருந்தார் கெவின் பீட்டர்சன். மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது அவர் மீது. மல்லையா அந்தக் குதிரையின் மீது அதிகப் பணமும் கட்டியிருந்தார். ஆனால் தொடர் தோல்விகள் கண்டு துவண்டிருந்த நிலையில் தனது இங்கிலாந்து அணிக்காக விளையாடச் சென்றார் பீட்டர்சன். அப்போது அணித்தலைவர் பதவி தேடி வந்து கிடைத்தது கும்ளேவுக்கு. யாருமே எதிர்பார்க்காத நிலையில் ஒரு U turn அடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் அணி, சிறப்பான பேட்டிங் மற்றும் அற்புதமான பந்துவீச்சு என மொத்தமான மாறியது அணி. டிமெர்வ், பிரவீன் மற்றும் அணித்தலைவர் கும்ளேவின் பந்துவீச்சு மிகச்சிறப்பாக அமைந்தது. டிராவிட், ரோஸ், ரைடர், காலீஸ், உத்தப்பா, கோலி ஆகியோரின் ஆட்டம் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்து. கடைசி வரைப் போராடினர் எல்லா ஆட்டங்களிலும். இறுதிப்போட்டி வரை சென்றது அந்த அணி. எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்தத் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் கண்டெடுத்த ஒரு முக்கிய அதிரடி ஆட்டக்காரர் பாண்டே. அப்புறம் டிமெர்வ். அருமையான சுழற்பந்து வீச்சாளார் மற்றும் அடித்து ஆடக்கூடிய நபர். வெற்றி பெற்றிருக்க வேண்டிய அணி. கோப்பையை பறிகொடுத்தது டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம். அந்தத் தோல்விக்கு கடைசி ஓவரில் ஒற்றை ரன்கள் எடுக்காமல் நின்றிருந்த உத்தப்பாவும் ஒரு காரணம். ராயல் சேலஞ்சர்ஸ் அணி, இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்க அணியின் கலவை எனலாம். காலிஸ், டிமெர்வ், பவுச்சர், ஸ்டெய்ன் என தென் ஆப்பிரிக்க வீரர்கள் அதிகம்.


மூன்றாவது தொடர் ஆரம்பத்தில் முதல் போட்டியில் கொல்கத்தை நைட் ரைடர்ஸிடம் மோசமாக தோற்றது ராயல் சேலஞ்சர்ஸ் அணி. அடுத்தது மோதியது பஞ்சாப் அணியுடன் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 204 ரன்கள் எடுத்தபோது முடிஞ்சு போச்சு ஆட்டம் என்று தான் நினைத்தேன். ஆனால் பாண்டே, காலிஸ் உத்தப்பா என மூன்றே பேர் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். காலிஸ் அடித்த 93, உத்தப்பாவின் அதிரடியான 51 ஆட்டத்தின் சிறப்பம்சங்கள். அடுத்து வந்த இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடி முதல் இடத்தில் இருக்கிறது இப்போதைய தரவரிசையில். காலிஸ் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிரடியான மற்றும் நிதானமான ஆட்டம் ஆடுகிறது அணி. இந்த முறை கோப்பை வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். பார்க்கலாம். இன்னும் நிறைய தூரம் கடக்க வேண்டி இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம் ஐபிஎல்லில்