Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, February 16, 2021

இடும்பாவனம் கார்த்தி - தமிழ்க்கேள்வி நேர்காணல் - சித்தாந்த வடை

 

இந்த இடும்பாவனம் கார்த்தி‌யின் தமிழ்க்கேள்வி நிகழ்ச்சி நேர்காணல் பாத்தேன்கொஞ்சம் கூட தான் பேசும் விஷயத்தில் தெளிவு இல்ல3 நிமிஷத்துக்கு முன்னாடி பேசினத மாத்தி பேசுறார். அடிப்படையில் திமுகவ எதிர்க்கனும். ஏன் எதிர்க்கனும்னா சுத்து சுத்துன்னு சுத்துறாப்ள. அதிமுகவ ஏன் எதிர்க்கலன்னா அதுக்கு ஒரு வடை🤦‍♂️


திமுகவை எதிர்க்கும் அளவுக்கு அதிமுகவை எதிர்ப்பது இல்லையே என்ற கேள்விக்கு. அதிமுகவுக்கு கொள்கைகளே இல்ல. திமுக மட்டும் தான் சித்தாந்தத்தோடு இருக்கு. அந்த சித்தாந்தத்துக்கும் எங்க சித்தாந்தத்துக்கும் தான் போட்டி. அதனால அது கூடத்தான் சண்டைன்னு சொன்னார், 5 நிமிஷம் கழிச்சு திமுகவுக்கு சித்தாந்தமே இல்ல, வேஷம் போடுதுன்னு சொல்றார்

ஜெயா ஒரு சாதாரண முதல்வர் அவரால என்ன செய்ய முடியும்னு பேசுற வாய், கலைஞர் ஈழப்போரில் சரியா நடந்துக்கல, கச்சத் தீவை தாரை வார்த்துட்டார்ன்னு சொல்லுது. ஒரு மாநில முதலமைச்சரால் எப்படி ஒரு தீவை கொடுக்க முடியும்னு யோசிக்க முடியல. எல்லாம் சரி பிரபாகரனை தூக்கில் போட வேண்டும்னு தீர்மானம் போட்ட சபாநாயகர் காளிமுத்து ஏன் நாம் தமிழர் சுவரொட்டிகளில் பிரபாகரனுக்கு சமமாக இடம் பிடித்திருக்கிறார் என்று கேட்டால், அவர் மொழிப்போரில் ஈடுபட்டார்ன்னு பதில் வருது. அந்த வாதம் சரியெனில் மொழிப்போர் தியாகிகள் எத்தனை பேரின் பெயர் அல்லது அவர்களது புகைப்படங்கள் அந்தச் சுவரொட்டிகளில் இருக்கிறது? காளிமுத்து படம் இடம்பெறுவது சீமானின் மாமனார் என்ற ஒற்றைத் தகுதியில் மட்டுமே என்பது தான் நிதர்சனம். 

எங்க கட்சியில தனிமனித துதிபாடுகள் இல்ல, நாங்க நபர்களை முன் வைக்கல, சித்தாந்தத்தை முன் வைக்கிறோம்னு சொல்றார். ஆனா சீமான் அண்ணன் சொல்றாப்ள நான் தான் கட்சி, நான் சொல்றவன் தான் வேட்பாளர் முடியும்னா இரு இல்லைன்னா கெளம்புன்னு சொல்றார். இது என்ன சித்தாந்தம்னு புரியல. சீமான் என்ற தனி மனிதரின் பொய்களும் அவரின் பேச்சுத் திறனும், திரைக்கதைத் திறனும் தான் நாம் தமிழர் கட்சிக்கு அடிப்படை. இந்த லட்சணத்துல தனிமனிதரை முன்னிறுத்தவில்லைன்னு எப்படி கொஞ்சம் கூட கூச்சப்படாம பொய் சொல்ல முடியுது? 

சீமானுக்கு முன்னாடியே புலிகளோடு தொடர்பில் இருந்து அவர்களோடு நெருக்கமாக பயணித்த கொளத்தூர் மணி, கு.ராமகிருஷ்ணன் எல்லாம் தமிழர்களே இல்லை என்பதெல்லாம் என்ன மாதிரியான பைத்தியக்கார மனநிலை என்று புரியவில்லை. கேட்டால் அவர்களின் தற்போதைய நிலைப்பாடுகள் காரணமாவாம். அப்படிப் பார்த்தால் காளிமுத்துவின் கடைசிக் கால நிலைப்பாடு பிரபாகரனைத் தூக்கில் போட வேண்டும் என்று சொன்னது தான். ஆனால் அவர் விஷயத்தில் மட்டும் பழைய மொழிப்போர் காலத்துக்கு போயிடுறாரு கார்த்தி. 

சங்கிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை தம்பிகள்.

இன்னும் கொஞ்சம் செந்தில் நெருக்கி கேள்விகள் கேட்டிருந்தால் சார் திமுகவ எதிர்த்தா தான் Payment வரும். வேற என்ன பண்றதுன்னு சொல்லிருப்பாப்ள.