Tuesday, May 22, 2012

+2


இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாயின... நாமக்கல் பகுதி மாணவர்கள் முதல் மூன்று இடங்களையும் பிடித்தனர்... இது வெற்றிச்செய்தி போல கொண்டாடப்படுகிறது, நான் நாமக்கல் வழி சேலம் செல்லும் போதெல்லாம் அங்கே புற்றீசல் போல இருக்கும் பள்ளிகளைப் பார்த்து வருத்தப்பட்டிருக்கிறேன், ராசிபுரம் அதற்கும் மேலே... அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக நான் அனுதாபப் படுகிறேன்... நீங்கள் மாணவர்களை, நல்ல சந்ததியினரை உருவாக்கவில்லை பள்ளிகளே... இயந்திரங்களை உருவாக்கி இருக்கிறீர்கள். பணம் கொட்டும் இயந்திரங்களை. மனிதத்தன்மையற்ற, சுயநலம் மிக்க, ஒரு சமுதாயத்தை உருவாக்குகிறீர்கள். வாழ்க உங்கள் சேவை...