Friday, April 17, 2009

நிலாச்சோறு



என் பால்யகாலம் பற்றி
உனக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்
வீட்டில் பால்சோறு செய்து
எடுத்துக்கொண்டு
ஆற்றங்கரை சென்றமர்ந்து
அம்மாவின் கையாலே
நிலாச்சோறு சாப்பிட்டேன்
பொற்காலம் அதுவென்றேன்

இரு இதோ வரேன் என்றாய்
தட்டில் சோறோடு
வந்தென்னை அழைத்துச் சென்று
மொட்டைமாடி இரவில்
உன் நெஞ்சில் சாய்ந்து
நிலா பார்த்த எனக்கு
நிலாச்சோறு ஊட்டினாய்
இன்னொரு தாயானாய் எனக்கு