Monday, August 10, 2009

மழையாய்....

உன் கவிதைகளுக்கு
நான் பதிலிடுவதில்லை
என்று கோபப்படுகிறாய்


உன் கவிதைகளின்
ரசிகன் நான்
மௌன ரசிகன்


அமைதியாய் ரசித்து
உள்ளுக்குள் சிரித்து
சிலிர்த்து பத்திரப்படுத்துகிறேன்
உன் கவிதைகளை


சில சமயம் ஆச்சர்யத்தில்
உறைந்து போவதுண்டு
உன் சொல்லாடல்கள் கண்டு


அள்ள அள்ள குறையாத
காதல் உன்னிடமிருந்து
வார்த்தைகளாய்ப் பெருக்கெடுத்து
மழையாய் நனைக்கிறது


நனைகிறவர்கள் அறிவார்களா
அந்த மழை நான் தான் என்பதை

4 comments:

கோல்ட்மாரி said...

ரொம்ப நல்ல இருக்கு ,மழையில் நனையாமல் நனைந்த மாதிரி இருக்கு

இரசிகை said...

mudivu ippadi yethirpaarkkave illai... azhagu:)

Information said...

Nalla kavithai.

uyirvaasam said...

அழகான மழைநாள் பாராட்டுக்கள்.

சாந்தி