Saturday, March 29, 2014

நான்....

பேஸ்புக் வந்ததில் இருந்து பெரிதாக ஒன்றும் வலைப்பக்கத்தில் எழுதுவது இல்லை.. அவ்வப்போது தோன்றும் கருத்துகளை அதிலேயே பதிந்து விடுவதால் வலைப்பக்கத்தில் எழுதமுடிவதில்லை.. ஆனாலும் மனதின் ஓரத்தில் வலைப்பக்கத்தில் எழுதவேண்டும் என்ற ஆவல் இருந்து கொண்டே இருக்கிறது... மறுபடியும் எழுதலாமே என்ற எண்ணத்தில் தான் இப்போது இங்கே....

சமூகத்திற்கு கருத்து சொல்ல நான் பெரிதாக எதையும் சாதித்துவிட வில்லை. மாதா மாதம் குடும்பம் நடத்த அல்லல்படும், பெரிதாக கனவுகளைச் சுமந்து ஓடும் சாதாரண common man நான்... அரசியல் நிகழ்வுகளும் நான் தினம் தினம் சந்திக்கும் மனிதர்கள் இந்த தேசத்தின் மீதும், மனிதர்கள் மீதான நம்பிக்கைகளையும் சிதைத்துக் கொண்டே இருக்கின்றன...

அரசியல், சமூகம், பொருளாதாரம், ஏற்றத்தாழ்வுகள், சாதிய அடக்குமுறை சார்ந்த மனப்பான்மை, பெண் மீதான psychological attack போன்றவை இந்த வாழ்க்கையின் மீதான அவநம்பிக்கைகளையும்,  எதிர்காலம் சார்ந்த பயத்தையும் தோற்றுவிக்கின்றன... அவ்வப்போது அப்படியெல்லாம் இல்லை.. இதுவும் கடந்து போகும். மாற்றம் ஒன்றே மாறாதது.. எல்லாம் மாறும் என்ற நினைப்பிலேயே கடந்து செல்கிறேன்... மாற்றம் வருமா?

No comments: