Saturday, March 24, 2007

இந்தியா படுதோல்வி

இந்த உலகக்கோப்பை இந்தியாவுக்குத் தான் அப்படீன்னு எல்லோரும் சொன்னப்ப நானும் ரொம்ப சந்தோசப்பட்டேன்... ஒரு சராசரி கிரிக்கெட் ரசிகனா இல்லாம கொஞ்சம் நம்ம அணியோட பலத்தையும், பலவீனத்தையும் அலசி பாத்தப்போ கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சேன், நம்ம அணி தேறுமான்னு சந்தேகம் வந்துச்சு... ஆனா குறைந்தபட்சம் அரையிறுத்திக்காவது வருவாங்கன்னு நினைத்தேன். ஆனா நம்ம பசங்க வழக்கம் போல கவுத்துட்டாங்க. முதல்ல பங்களாதேஷ் கிட்ட தோத்தப்ப சரி நம்ம ஆளுங்க கொஞ்சம் அதீத நம்பிக்கையோட ஆடி கவுந்துட்டாங்க பரவயில்லை அடுத்த ஆட்டங்களில் பட்டைய கிளப்புவாங்கண்ணு பாத்தேன் நினைச்ச மாதிரி பிர்முடாவை காலி பண்ணினாங்க ஆனா அந்த ஆட்டத்துலயும் நம்ம பந்துவீச்சு சொதப்பலாவே இருந்துச்சு... சரி அடுத்து இலங்கையையும் காலிப் பண்ணிட்டு அடுத்த சுற்றுக்கு போவாங்கன்னு பாத்தா நேத்து பெருசா நமக்கு நாமம் போட்டுட்டு போய்ட்டாங்க...

யாரிடம் தவறுள்ளது? கிரிக்கெட் வாரியத்தில் ஆரம்பித்து, பயிற்சியாளர், அணித்தலைவர், விளம்பரத்தில் மட்டுமே நன்றாக விளையாடும் வீரர்கள்ன்னு பட்டியுல் நீளுது... ஆனா முக்கியமான காரணம் என்ன? பணம்... அவர்களுக்கு கொட்டிக்கொடுக்கப்படும் பணம்... விளையாடினாலும், இல்லாவிட்டாலும், அவர்களுக்கு விளம்பரம் மூலம் கிடைக்கும் பணம்... 10 ஆட்ட‌ங்க‌ளில் ஒழுங்காக‌ விளையாடினால் அவ‌ரை ர‌சிக‌ர்க‌ள் த‌லையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்க‌ள். பிற‌கென்ன ப‌ண‌ம் கொட்டுகிற‌து....

விளையாடும் போது வெற்றி பெற‌வேண்டுமென்ற‌ வெறி இருக்க‌ வேண்டும்... ந‌ம் அணி வீர‌ர்க‌ளுக்கு அது சுத்த‌மாக‌ கிடையாது... ச‌ச்சின் போன்ற‌ வீர‌ர் க‌ள‌மிற‌ங்கின‌ல் எதிர‌ணி வீர‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் ஏற்ப‌ட‌ வேணும் அந்த‌ அள‌வுக்கு அவ‌ர் விளையாட‌ வேண்டும். ஆனால் அவ‌ர் அப்ப‌டி விளையாடி ப‌ல‌ மாத‌ங்க‌ளாகி விட்ட‌ன‌... யாரைக் குறை சொல்ல‌?

ஆனால் இது போன்ற‌ ஒரு தோல்வி தேவைதான்... இனிமேலாவ‌து ந‌ம்முடைய‌ க‌வ‌ன‌ம் ஹாக்கி, கால்ப‌ந்து போன்ற‌ விளையாட்டுக‌ளில் போனால் ப‌ர‌வாயில்லை...