Monday, October 13, 2008

இன்றோடு இரண்டு வருடம் ஆகிறது...

விளையாட்டாக வலைப்பக்கம் ஆரம்பித்து இன்றோடு இரண்டு வருடங்கள் முடிந்து மூன்றாவது வருடம் ஆரம்பிக்கின்றது. ஒரு வலைப்பக்கத்தை இரண்டு வருடம் தொடர்வதே பெருய விஷயமாக கருதுகின்றேன். ஏனெனில் நான் கொஞ்சம் சோம்பேறி, என்ன செய்ய???? மற்ற வலைப்பதிவர்களைப் பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையாக இருக்கும். எப்படி இவர்களால் இவ்வளவு எழுத முடிகிறது என்று. என்னை பிரமிக்கச் செய்த சில வலைப்பதிவர்கள், பொன்ஸ், நந்தா, போன்றவர்கள். என்னுடைய கருத்துகள் பல அப்படியே நந்தாவின் கருத்துக்களோடு ஒத்துப்போகும். என்னை ஊக்கப்படுத்திய என்னுடைய நண்பர்கள், குறிப்பாக ஜெயக்குமார், நிலாரசிகன், விழியன், அண்ணன் N. சுரேஷ் போன்றோருக்கு என்னுடைய நன்றிகள். என்னுடைய எண்ணங்களை கட்டுரையாக எழுத பலமுறை நினைப்பதுண்டு, நேரத்தை சரியாக பயன்படுத்த தெரியாமல் பிறகு பார்க்கலாம், நாளை எழுதலாம் என்று நினைத்தே தள்ளிப்போட்டு பிறகு, நான் எழுத நினைத்த தலைப்போ அல்லது கருத்தோ பழையதாகி விடும்போது, என் எண்ணங்களும் அதோடு சேர்ந்து மடிந்து போகின்றன. இனிமேல் நிறைய பயனுள்ள விஷயங்கள் எழுதவேண்டும். இது தான் நான் எடுத்திருக்கும் இப்போதைய முடிவு. பார்க்கலாம் இதை எப்படி செயல்படுத்துகிறேன் என்று.

2 comments:

MSK / Saravana said...

இன்னும் நிறைய எழுதுங்க. வாழ்த்துக்கள்..

ஜே கே | J K said...

வாழ்த்துக்கள் மாப்பி.

நீ பேசற எல்லா கருத்துக்களையும் அள்ளி தெளிச்சி விடு.