Monday, November 23, 2009

தீர்க்கப்படாத கணக்கு

மணிக்கணக்காய்
பேசிவிட்டு
கிளம்பும் போதும்
ஏதோ மிச்சம் வைத்திருப்பதாகவே
தோன்றுகிறது.
கொஞ்சம் சேமித்து வைத்திருக்கும்
முத்தங்களைக் கொடுத்து
கணக்கை தீர்த்துவிட்டு போ


******


இன்னும் கொஞ்சம்
என்று நான் கேட்க
முடியாது போடா
என்று நீ தள்ள
ஹீம்ம்ம்ம்ம்
கோபித்துக் கொண்டு
தள்ளிப் போய்
நாற்காலியில் அமர்ந்தேன்
சிரித்துக் கொண்டே
பின்னால் வந்து
கட்டிக்கொண்டு
இந்தா என்று அள்ளிக் கொடுத்தாய்
முத்தங்களை

4 comments:

இரசிகை said...

:)

theerkka mudiyaatha kanakkallavaa athu!!

Unknown said...

என்ன சொல்லி பாராட்டுவது உனது கவிதையை

ரொம்ப அருமை ...

Tamil Home Recipes said...

மிகவும் அருமை

Tamilparks said...

அருமையான கவிதை வரிகள், தாங்கள் விரும்பினால் தங்கள் கவி பூக்களை நமது தமிழ்தோட்டத்திற்கும் அனுப்பவும் அவை தமிழ்த்தோட்டத்தில் பூத்து மணம் வீசும்

http://tamilparks.50webs.com