Wednesday, February 13, 2008

நீ - 3





உனக்காக
காத்திருக்கும்
ஒவ்வொரு வினாடியும்
பூக்களாக மாறி
என் மீது விழுகின்றன
தேவதை உனக்காக
காத்திருப்பதற்கு
ஆசிர்வதித்தபடி

*****

உன் பொண்டாட்டி
என்று முதல்முறை
கையொப்பமிட்ட
உன் மின்னஞ்சலை
மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்
ஒரே ஒரு வருத்தம் தான் எனக்கு
இதை எழுதும் போது
பொங்கிய வெட்கம் கலந்த
சிரிப்பை பார்க்கமுடியவில்லையே...

*****

உன்னைப் பற்றி
எழுதலாம் என்று
நினைத்து
வார்த்தைகள் தேடுகின்றேன்...
அனைத்துமே உன்னைச்
சிறுமைப் படுத்துகின்றன
புள்ளியோடு முடிந்து போகிறது
கவிதை...

8 comments:

ஜே கே | J K said...

எல்லாமே அழகுடா மாப்பி.

அதுவும் அந்த 2-வது சூப்பரே சூப்பர்.

வாழ்த்துக்கள்டா.

Unknown said...

அருமை //உன் பொண்டாட்டி
என்று முதல்முறை
கையொப்பமிட்ட
உன் மின்னஞ்சலை
மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்
ஒரே ஒரு வருத்தம் தான் எனக்கு
இதை எழுதும் போது
பொங்கிய வெட்கம் கலந்த
சிரிப்பை பார்க்கமுடியவில்லையே/// படிக்கும் எனக்கே வருததமாக தான், தோழா இன்னும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்

விழியன் said...

அடடா...
காதல் ரசம் வழிகின்றது..

மேலும் மேலும் வழியட்டும்..

ச.பிரேம்குமார் said...

அழகான காதல் கவிதைகள் சார்லஸ். வாழ்த்துக்கள் :)

Thenie said...

அடடா அழகான காதல் வரிகள்

ஆனால் உண்மையும்கூட

அருமை சார்லெஸ் இன்னும் வேண்டும்

Unknown said...

எல்லாமே அழகு....... அருமை, காதல் அனுபவம் நிறைய் சொல்லுது வளர்க, வாழ்த்துக்கள் சார்லஸ்

cheena (சீனா) said...

அருமை அருமை - வெட்கம் கலந்த சிரிப்பினைக் கற்பனையில் காண்வதே மகிழ்ச்சி தானே - நல்வாழ்த்துகள்

இரசிகை said...

nallaayerukku..