Wednesday, January 13, 2010

பயணங்கள் - 3

பள்ளத்தாக்குகளின்
காடுகளைக் கடக்கும் போதெல்லாம்
மரங்களின் ஊடே பயணிக்கும்
ஆசை வந்து விடுகிறது
எனக்கு

கைகளைத் தேய்த்துக் கொண்டு
கன்னத்தில் வைத்து
சூடு பரப்பவும்

அண்ணாந்து பார்த்துக் கொண்டே
மரங்களைக் கிழித்து
கீழே இறங்கும்
வெளிச்சம் தரிசிக்கவும்

கைகளை விரித்து
தழுவிச் செல்லும்
காற்றை வரவேற்கவும்

பச்சை மரங்களின்
வாசனை
நுகரவும்

இன்னும் இன்னும்
நிறையவே
ஆசை

எல்லாம் அமுங்கிப் போய்
தொலைந்துவிடுகிறது
கான்கிரீட் காடுகளில்
சிக்கிக் கொள்ளும் போது....