Tuesday, December 29, 2009

பயணங்கள்

நகரும் மரங்களின்
கிளைகளின் மீதேறி
உயரே பறக்கிறது

வயலின் வயிற்றைக்
கிழித்து விரிந்திருக்கும்
ஒற்றை மரத்தில் நிலைகொண்டு
அமர்ந்திருக்கிறது

மலைகளின் பிளவுகளில்
இருளைக் கிழிக்கும்
வெளிச்சத்தில் ஊர்ந்து செல்கிறது

சராலென கீழிறங்கும்
பள்ளத்தாக்கின்
மயக்கும் வனப்பில்
லயிக்கிறது

என்னோடு மட்டும்
வரமறுக்கிறது
ரயில் பயணத்தில்
மனசு...

6 comments:

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் ...... said...

((((((((((என்னோடு மட்டும்
வரமறுக்கிறது
ரயில் பயணத்தில்
மனசு... )))))))))))))


உயிருள்ள வரிகள் அற்புதமான வார்ப்பு வாழ்த்துகள் .


என்றும் அன்புடன் ,
சங்கர் ........................
http://wwwrasigancom.blogspot.com/

cheena (சீனா) said...

நல்ல கவிதை சார்ல்ஸ்

நல்வாழ்த்துகள்

Anonymous said...

அருமையான அழகான வரிகள்.
கி.சார்லஸ்
ckicharles@yahoo.com

கி.சார்லஸ் said...

அருமையான அழகான வரிகள்.
கி.சார்லஸ்
ckicharles@yahoo.com

Anonymous said...

Arumaiyana
azhagana varigal

இரசிகை said...

m.....nallaayirukku.!

happy new year..)