Thursday, December 07, 2006

சொல்லாமல் விட்ட காதல் 1

திட்டமிட்டுச் செய்யாமல்
திடீர் தாக்குதல்
நடத்தி என்னைச்
சிறைப்பிடித்தாய்

போர்க்கைதிகளை
நியாயமாக நடத்த
சட்டம் உண்டு
ஆனால் உந்தன்
மனக்கைதி எனக்கு
என்ன உண்டு

தினமும் உனக்காகவே
அந்தச் சாலையில்
காத்துக் கொண்டிருக்கிறேன்

மக்களை நிராகரிக்கும்
அரசியல்வாதி போல
என்னை நிராகரித்துச் செல்கிறாய்

சூறாவளியில்
சிக்கிய பொருள்போல்
ஆனது என் நிலைமை

மீண்டும் மீண்டும்
உன்னை நோக்கி
படையெடுத்துக்
கொண்டிருக்கிறேன்
வெற்றி பெறுவேன்
என்ற நம்பிக்கையோடு

------------------------

பயணம்

தொடர்ந்து
பயணிக்கிறேன்
என்றாவது ஒருநாள்
உன்னைச் சந்தித்து
விடுவேன் என்ற
நம்பிக்கையில்

3 comments:

Divya said...

நல்லாயிருக்கிறது உங்கள் கவிதை முயற்ச்சி, தொடர்ந்து எழுதவும்! வாழ்த்துக்கள்!!

மழைக்காதலன் said...

உங்கள் பதிலுக்கு நன்றி

Unknown said...

வாழ்த்துக்கள்!!தோழா