Thursday, December 07, 2006

டிசம்பர் - 6

டிசம்பர் - 6

பாவிகளே
எதை இடித்து
எதை கட்டினீர்கள்

நீங்கள் இடித்தது
கட்டடம் என்றால்
மீண்டும் கட்டியிருக்கலாம்
ஆனால் நீங்கள் இடித்தது
மக்களின் மனம் அல்லவா?

உங்களால்
இங்கு சிந்தப்பட்டது
பலரின் கண்ணீர்
மட்டும் அல்ல
சிலரின்
இரத்தமும் தான்

உங்களால் கொல்லப்படுவது
மனித உயிர்கள்
மட்டுமல்ல
மனித நேயமும் தான்

இங்கே அறுபட்டது
பலரின் குடல்கள்
மட்டுமல்ல
எங்களின் உறவுகளும் தான்

போதும் நிறுத்துங்கள்

இனியும் மதத்தின்
பெயரால்
எங்கள் சகோதரர்கள்
அனாதைகளாய்
அகதிகளாய்
அலைய வேண்டாம்

விழிகளில் ஈரத்தையும்
மனதில் பாரத்தையும்
சுமந்து நிற்க வேண்டாம்

போதும் நிறுத்துங்கள்...

No comments: