Thursday, December 07, 2006

அன்புத் தோழி 1

முகவரி கேட்டு
வந்தாய்
முகம் தெரியா
இருவரும்
நண்பர்களானோம்

------

உன் திருமணம்
முடிந்தபின்
என்றாவது ஒரு நாள்
உன்னைச் சந்திப்பேன்
என்ற நம்பிக்கையில் தான்
அன்று வீடு திரும்பினேன்

-------

உன் பிறந்தநாளின்
போது நாம்
பேசிக் கொண்டதை
நினைத்து
மூன்று நாட்களாய்
தனியே சிரிக்கிறேன்
பைத்தியக்காரனைப் போல்

No comments: